பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டம்பர் மாத இறுதிக்குள் இரத்துச் செய்யப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக இயற்றப்படும் என்றார்.










