நாடாளுமன்றம் இன்று (23) முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
சீனி இறக்குமதியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி, காடழிப்பு விவகாரம், ஊடகங்கள் தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்பு ஆகியன தொடர்பில் இவ்வார சபை அமர்வில் எதிரணிகள் கேள்விகளைத் தொடுக்கவுள்ளன.
அத்துடன், சீனி விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
அதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பில் மூன்று நாட்கள் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே ஒரு நாள் விவாதம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையிலேயே இவ்வார சபை அமர்வில் இரு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.