நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலினியின் சடலம், 12 நாட்களுக்கு பின்னர் இன்று இரண்டாவது தடைவையாகவும் டயகம மூன்றாம் பிரிவிலுள்ள பொது மயானத்தில் மீண்டும் அதே இடத்தில் (13) புதைக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவிற்கமைய இரண்டாவது வைத்திய பரிசோதனைக்காக கடந்த 30ஆம் திகதி ஹிஷாலினியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, பலத்து பாதுகாப்புக்கு மத்தியில் பேராதனைக்கு வைத்திய பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
வைத்திய குழுவின் பரிசோதனை நிறைவடைந்த நிலையில், உறவினர்களிடம் சடலம் இன்று மீள கையளிக்கப்பட்டது. இந்நிலையிலேயே மீண்டும் புதைக்கப்பட்டது.
மரண பரிசோதனை தொடர்பான அறிக்கையை விசேட வைத்தியக்குழு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
