பரீட்சை வினாத்தாள் கசிவு மோசடியை தடுக்க புதிய ஏற்பாடு!

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் எதிர்காலத்தில் அரை தானியங்கி முறையில் (semi-automatic method) பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை பின்பற்றவுள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் வினாத்தாள்கள் கசிவு போன்ற மோசடிகள் குறையுமென்றும், வினாத்தாள் தயாரிப்பில் தனிநபர்களின் பங்களிப்பைக் குறைத்து, அரை தானியங்கி முறையில், கணினி மயமாக்கப்பட்ட முறையில் வினாத்தாள் உருவாக்கம் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறினார்.

இந்த புதிய முறையின் கீழ், மோசடி மற்றும் ஊழலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.புதிய கல்வி சீர்திருத்தங்களால், வினாத்தாள்கள் தயாரிக்கும் பணியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாக இந்த புதிய முறைகள் பின்பற்றப்படுமென்றும் அவர் கூறினார்.

பரீட்சை வினாத்தாள் தயாரிக்கும் பணியை தனி நபர்களை கொண்டு மேற்கொள்ளும் வரை, நூறு வீதம் மோசடி மற்றும் ஊழலை தவிர்க்க முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பரீட்சை திணைக்களத்தின் பொறிமுறையில் கடந்த காலங்களில் வினாத்தாள்கள் கசிந்தமை ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. தனிப்பட்ட நபர்களின் நம்பிக்கை தொடர்பான பிரச்சினையே பரீட்சை வினாத்தாள்கள் கசிந்தமைக்கான காரணமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பொதுப் பரீட்சைகள் சட்டத்தின் விதிகள் மற்றும் குற்றவியல் சட்டக்கோவையின் விதிகளின்படி, பரீட்சை மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு தண்டனை மற்றும் பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

(Public Examinations Act) பொதுப் பரீட்சைகள் சட்டம் முழுக்க முழுக்க கிரிமினல் குற்றங்களைக் குறிப்பிடும் சட்டமாகும் என்றும் அவர் கூறினார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles