உயர்தரப்பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியன திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுமா அல்லது பிற்போடப்படுமா என்பது தொடர்பில் இன்று அல்லது நாளைக்குள் உரிய அறிவிப்பு விடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன் மாணவர்களின் சுகாதார நலனைக்கருத்திற்கொண்டே அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
