பஸ் விபத்தில் ஒருவர் பலி: 8 பேர் காயம்!

குருணாகல், மெல்சிறிபுர பகுதியில் அதிசொhகுசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை (17) அதிகாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ்ஸொன்றும், கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதி சொகுசு பஸ்ஸொன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ்ஸொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles