பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு மனிதாபிமான உதவி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை நேற்று (15) கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இந்த உதவியை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றனர். பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் இந்த மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இலங்கையில் தற்போதைய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில், பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 மெட்ரிக் டொன் மனிதாபிமான உதவிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த உதவித் தொகையில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் மற்றும் கூடாரங்கள், போர்வைகள் போன்றவை அடங்கும்.அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக உயிர்காப்பு ஜெக்கெட்டுகள், படகுகள் மற்றும் நீர் அகற்றும் பம்புகள் ஆகியவை அடங்கும். மக்களின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய மருந்துகள், பால்மா, மருத்துவ உணவுகள், நுளம்பு வலைகள் போன்றவையும் இதில் அடங்கும்.

இந்த அனர்த்த சமயத்தில் இலங்கைக்கு ஆதரவாக இருந்து , நிவாரணம் வழங்குவதற்கும், நாட்டின் மீளமைப்பிற்கு உதவுவதற்கும் பாகிஸ்தானின் அர்ப்பணிப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.

எதிர்வரும் நாட்களில், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மனிதாபிமான உதவிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles