பாடநூல் அச்சிடுவதற்கான மூலப்பொருட்கள் இந்திய கடனிலிருந்து

பாடநூல் அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளில் 30% உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் இன்று பெற்றுக்கொள்ளப்பட்டு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles