‘பால்மாவை ஒளித்து விற்பதுபோல 2,000 ரூபாவை வழங்கும் நிலை’

கடைகளில் தற்போது பால்மா பொதிகளை மறைத்து வைத்துக் கொடுப்பது போல அரசாங்கத்தின் 2000 ரூபாய் நிவாரணத் தொகையை ரகசியமாக வழங்க வேண்டிய நிலைமை கிராம சேவகர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  நாட்டில் கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2000 ரூபாய் அரச நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.

இந்த அரச நிவாரணத் தொகையை பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் தெரிவு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் உள்ள கிராமிய குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரங்கள் பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பயனாளிகளின் தொகையில் பத்து வீதமானோருக்கே பிரதேச செயலகங்களினால் கிராமசேவகர்களுக்கு 2000ரூபாய் அரச நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு கிராம சேவகர் பிரிவில் 1500 பயனாளிகளில் பெயர்கள்
வழங்கப்பட்ட போதும் 100 முதல் 150 பேருக்கு வழங்கக் கூடிய வகையிலேயே இந்த அரச நிவாரணமான 2000 ரூபாய் பிரதேச செயலகங்களில் வழங்கப்பட்டுள்ளதாக கிராமசேவகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் என்று தெரிவு செய்யப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் 2000 ரூபாய் அரச நிவாரணம் வழங்க முடியாத நிலைமை கிராம சேவகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த அரச நிவாரணத்தை வெளிப்படையாக பயனாளிகளுக்கு வழங்குவதை கிராம சேவகர்கள் தவிர்த்து வருவதாகவும் ரகசியமான முறையில் இதனை வழங்கி வருவதாகவும் அறியமுடிகின்றது.

மேலும் இந்த அரச நிவாரணத்தை சிறிய தொகையான பயனாளிகளுக்கு வழங்குவதால் தமக்கு மக்கள் மத்தியிலிருந்து பாரிய எதிர்ப்புகள் ஏற்படலாம் என்பதைக் கருதி கிராம சேவகர்கள் பலர் பிரதேச செயலகங்களில் இருந்து தாம் பெற்றுக்கொண்ட நிவாரணத் தொகையை மீண்டும் பிரதேச செயலாளர்களுக்கு ஒப்படைப்பதற்கு தயாராகி வருவதாகவும் அறியமுடிகின்றது.

ஆகவே அரசாங்கத்தின் இந்த 2000 ரூபாய் நிவாரணமானது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். இதனால் மக்களே பெரும்பாலும் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள அனைவருக்கும் அரச நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles