பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நாம் பாதுகாப்போம். நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டு அஞ்சவில்லை. அது தோற்கடிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அறிவித்தார்.
“ கல்வி மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், ஒரு தவறை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த கல்வி மறுசீரமைப்பையும் விமர்சிப்பது ஏற்புடையது அல்ல.
அரசியல் ரீதியில் எதிரணிகள் வங்குரோத்தடைந்துள்ளன. தமது இருப்புக்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கின்றன. இதனை தோற்கடிப்பதற்குரிய இயலுமை அரசாங்கத்துக்கு உள்ளது. அது குறித்து நாம் அச்சம் கொள்ளவில்லை.
பிரதமரை நாம் பாதுகாப்போம். அவருக்கு ஆதரவாக அரசாங்கம் உள்ளது.” – என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மேலும் கூறினார்.
