பிளாஸ்டிக்கை தடை செய்யும் சட்டம் நாளை முதல் அமுலுக்கு

ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்தார்.

அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles