பிள்ளையான்மூலம் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தும் திட்டம் தோல்வியாம்!

” பிள்ளையானை கைது செய்து, அவர் வழங்கிய வாக்குமூலம் என்ற அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரியொருவரை உருவாக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், பிள்ளையானின் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக பகிரங்கப்படுத்தப்படுவார்கள் என மார்ச் 30 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டார். இன்று ஏப்ரல் 21 ஆம் திகதி? ஆனால் அப்படியொரு வெளிப்படுத்தல் ஜனாதிபதியால் செய்யப்படவில்லை. அந்த அடிப்படையில் மற்றுமொரு உறுதிமொழியை அரசாங்கம் மீறியுள்ளது.

பிள்ளையானை கைது செய்து, அவர் வழங்கிய வாக்குமூலம் என்ற அடிப்படையில் தமது மனதில் உள்ள பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்தவே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. அதனால்தான் பிள்ளையானை சந்திப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படவில்லை. சந்தேக நபர் ஒருவருக்குள்ள உரிமைகள்கூட மறுக்கப்பட்டன. பிள்ளையானின் கைது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்புபடுத்தப்பட்டது.

இதனால்தான் சட்ட துருப்பை பயன்படுத்தி பிள்ளையானை, சந்தித்து அரசாங்கத்தின் திட்டத்தை முறியடித்தோம். பிரதான சூத்திரதாரியை உருவாக்கும் முயற்சியை இல்லாது செய்ய முடிந்தது.
சஹ்ரான்தான் பிரதான சூத்திரதாரியென அமெரிக்காவின் எப்பிஐகூட கூறியுள்ளது.” – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles