புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

நேற்று (23) மாலை 6 மணி முதல் அனைத்து புகையிரத நிலையங்களிலும் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

 

 

அந்தவகையில், மலையக புகையிரத நிலையங்களிலும் அதிபர்கள் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தனர்.

 

 

இதனால் பயணிகள் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்திருந்தமையை காணக்கூடியதாக இருந்ததோடு, கடும் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

 

 

புகையிரத கட்டண திருத்தத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

 

 

இந்த தொழில்சார் நடவடிக்கையானது 48 மணித்தியாலங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles