பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 196 உறுப்பினர்களில் 64 பேர் முதன்முறையாக பாராளுமன்றம் செல்லவுள்ளனர். அத்துடன் 12 பேருக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி அமையவுள்ள 9 ஆவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரில் 76 பேர் புதுமுக உறுப்பினர்களாவர்.
அதேவேளை, பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவானவர்களில் இளம் வயதுடைய அரசியல்வாதியாக இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விளங்குகின்றார்.