புதையல் தோண்டிய 14 பேர் கொஸ்லாந்தை பொலிஸாரால் கைது!

சட்ட விரோதமாக புதையல் தோண்டிய 14 பேரை, கொஸ்லாந்தை பொலிஸார் இன்று 25.01.2021 கைது செய்துள்ளனர்.

கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார், தும்மல்ஹார என்ற இடத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த 14 பேரையும், கைது செய்தனர்.

அத்துடன், புதையல் தோண்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14பேரும், ஊவா-மாவெலகமைச் சேர்ந்த ஒக்பீல்ட் பெருந்தோட்டத்தைச் சேர்ந்தவர்களாவார். இவர்கள் விசாரணையின் பின்னர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, கொஸ்லாந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவித்தார்.

எம். செல்வராஜா – பதுளை

Related Articles

Latest Articles