புரெவி புயல் தாக்கம் மற்றும் சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 20 ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (4) மாலை விடுத்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் உயிரிழந்துள்ளதுடன் அறுவர் காயமடைந்துள்ளனர். 57 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 753 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆயிரத்து 604 பேர் 58 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டம்
புரெவி புயலால் யாழ் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச்சேர்ந்த 54 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். அறுவர் காயமடைந்துள்ளனர். 55 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 443 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 477 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 941 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 393 பேர் 36 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டம்
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 227 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 வீடுகள்
பகுதியளவு சேதமடைந்துள்ளன. 6 ஆயிரத்து 795 பேர் 18 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் புரெவி புயலால் ஆயிரத்து 462 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு முழுமையாகவும், 210 வீடுகள் பகுதிளவும் சேதமடைந்துள்ளன. 4 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ன. 2 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் 641 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 282 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
