புலிகள் கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை!

 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில்கூட இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்பன வேறு, புலிகளின் அபிலாஷைகள் என்பன வேறு. இதை புரிந்துகொள்ள முடியாததால்தான் வடக்கில் பெரும் பின்னடைவை அரசாங்கம் சந்தித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

” புலிகளுடன்தான் நாம் போர் செய்தோம். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த போர் எப்படி இனவாதமாகும்? எமது புலனாய்வுப் பிரிவில் முஸ்லிம் அதிகாரிகள் உள்ளனர். விமானப்படையில் தமிழ் அதிகாரிகள் இருக்கின்றனர். போரை முடித்த பிறகு பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு தமிழ் இளைஞர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

நாம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் போரிடவில்லை. புலிகளுடன்தான் சமரிட்டோம். ஆனால் தற்போதைய அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழர்களும், புலிகளுக்கு சமனானவர்களாக பார்ப்பதற்கு முற்படுகின்றது. இது தவறு. இந்த விடயத்தில்தான் இனவாதம் உள்ளது.” எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் வடக்கில் இருந்து கிடைக்கப்பெற்ற பெறுபேறு தொடர்பில் ஜனாதிபதி ஆழமாக ஆராய வேண்டும்.
வீதிகளை திறந்தார்கள், காணிகளை கையளித்தார்கள், ராஜபக்சக்களால் களவாடப்பட்டது எனக் கூறப்படும் தங்கத்தைகூட கடைசி நேரத்தில் ஒப்படைத்தார்கள். இவ்வாறு வழங்க வேண்டிய அனைத்தையும் வழங்கினார்கள். இறுதியில் தேர்தல் முடிவு எவ்வாறு அமைந்தது? ஆக தமது பயணம் தவறு என்பதை ஜனாதிபதி உணர வேண்டும். ” எனவும் நாமல் ராஜபக்ச கூறினார் .

கருத்தியல் ரீதியில் பயங்கரவாதிகள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில் இனவழிப்பு நினைவகம்கூட அமைக்கப்பட்டுள்ளது. கனடாவில் புலி டயஸ்போராக்கள் உள்ளனர். அதேபோல தமிழ் டயஸ்போராக்கள் அனைவரும் புலிகள் அல்லர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.” – என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles