பொகவந்தலாவையில் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்கான பெண் தோட்டத் தொழிலாளி

பொகவந்தலாவ, தெரேசியா – மோரா மேல் பிரிவு தோட்டத்தில், தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இன்று மதியமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து கொய்து கொண்டிருந்த 55 வயதான பெண் தோட்டத் தொழிலாளியொருவரே, இவ்வாறு சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனையடுத்து தோட்ட நிர்வாகத்தின் வாகனம் மூலம் பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா நிருபர்

மஸ்கெலியா நிருபர்.

Related Articles

Latest Articles