பொன்சேகா பிரதமரா? அவரே வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி வகிக்கும் அரசில், எந்தவொரு பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையுடன் தான் உடன்படுவதாகவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகாவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது எனவும், இது சம்பந்தமாக ஜனாததிபதியுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியிருந்தது. அந்த தகவலையும் அவர் நிராகரித்துள்ளார்.

Related Articles

Latest Articles