“பொன்சேகா வசம் குரல் பதிவு இருந்தால் அதனை அவர் வெளியிடட்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
ராஜபக்சக்கள்மீதான பொன்சேகாவின் விவகாரம் மற்றும் காணொளி வெளியிடும் விவகாரம் என்பன தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.
” பொன்சேகாவின் இயல்பு அது. முன்னரும் அவர் அப்படிதான். குரல் பதிவு இருந்தால் அதனை அவர் வெளியிடட்டும். அதற்குரிய உரிமை அவருக்கு உள்ளது. கோட்டாபய ராஜபக்ச, பொன்சேகாவுடன் நம்பி கதைத்திருகக்கூடும். ஆக அதனை வெளியிட்டால் தற்போது பொன்சேகாவை நம்புபவர்களின் நிலை என்னவென்று சொல்வது?” – என்றார் நாமல் ராஜபக்ச.
