போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: 241 பேர் பலி!

போர் நிறுத்தத்தைமீறி காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்திவருகின்றது. அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது முதல் இதுவரையில் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 241 ஆக அதிகரித்துள்ளது.

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டபோதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தினசரி இடம்பெற்று வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறான தாக்குதல்களில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடந்த இரண்டு ஆண்டுகள் நீடித்த காசா போரில் இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆறு உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்பட்டிபருப்பதாக சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதலில் 241 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது மாத்திரமன்றி மேலும் 619 பேர் காயமடைந்திருப்பதோடு இடிபாடுகளில் இருந்து 528 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அமைச்சு தெரிவித்தள்ளது.

இதன்படி காசாவில் 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்தைத் தாண்டி 69 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1லட்சத்து 70 ஆயிரத்து 960 பேர் காயமடைந்துள்ளனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles