மக்கள் படை திரட்டுகிறது சஜித் அணி – மாத்தறையில் இருந்து நடவடிக்கை ஆரம்பம்

” கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டின் இன்று சகல துறைகளும் சரிந்துபோயுள்ளன.பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு நாட்டின் பெருன்பான்மையினர் பட்டினியில் இருக்கின்றனர்.மக்கள் வாழ்வதற்கான போராட்டதை முன்னெடுத்துள்ளனர்.

சுகாதாரத்துறை முற்றிலுமாக சரிந்து விட்டது.இதற்கான காரணங்களை நாம் பாராளுமன்றத்தில் முன்வைத்தோம்.நாட்டு மக்கள் இன்று புதிய ஆட்சியையே எதிர்பார்க்கின்றனர்.நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சூழ்ச்சியால் ஆட்சிக்கு வந்தமை இன்று சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த அரசாங்கம் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்ததாக சர்வதேச அமைப்புகள் கூறுகின்றன. சூழ்ச்சியினாலையே கடந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக சர்வதேசம் இன்று கூறுகின்றது.நாட்டின் புலனாய்வு பிரதானிக்கு முறைபாடுகள் குற்றங்கள் எழுந்துள்ளன.

எனவே நாட்டிற்கு புதிய ஆட்சி தேவை, நாட்டிற்கு பொறுப்பான நிர்வாகம் தேவை. இந்த ஆட்சியை பொறுப்பேற்க சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.ஏனைய கட்சிகள் தேர்தல் தொகுதிக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது மாத்திரமே.நாம் நாட்டின் சகல தேர்தல் தொகுதிகளிலும் தொகுதிக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டோம். கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினையும் கிராமத்திற்கு கிராமம் செல்லும் புதிய வேலைத்திட்டத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம்.

அன்றைய தினங்களில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் மாவட்டத்திற்குச் சென்று புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல்,வாக்காளர் பிரிவு கிளைகள்,மகளிர் பிரிவுகள்,இளைஞர் பிரவுகள்,பிக்குகள் முன்னணியின் பிரிவுகளை ஸ்தாபிக்கும் நடவடிக்கைகளை அன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளோம்.அடுத்த அடுத்த மாதங்களில் இந்த வேலைத்திட்டத்தை சகல மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துவோம்.

நாங்கள் வெற்றியை தனதாக்குவது இவ்வாறே. நாட்டை கட்டியெழுப்புவதே ஐக்கிய மக்கள் சக்தியின் குறிக்கோள்.அந்த இலக்கை வெல்வதற்கான பிரச்சாரம் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு முகங்கொடுக்கக் கூடிய எந்தவொரு தரப்பும் ஆளும் தரப்பில் இல்லை. பொதுஜன பெரமுனவிற்கு கிராமத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி குறித்து பேசுவதில் அர்த்தமில்லை.மக்கள் விடுதலை முன்னணியின் பயங்கரமான பொருளாதாரக் கொள்கையைப் பற்றி நினைக்கும் போதே அவர்களுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது.

மகளிர் சக்தி,இளைஞர் சக்தி,கிளைச் சங்கம் மட்டுமின்றி,பிக்குகள் ஆலோசனை சபை,சர்வமதத் தலைவர்கள் ஆலோசனை சபை,தொழிற்சங்க இயக்கங்கள்,சார்புடைய அமைப்புகளாலும் கட்சியைப் பலப்படுத்துவோம்.அடுத்த வருடம் தேர்தலுக்கான வருடமாகும்.எந்நேரத்திலும் தேர்தலை சந்திக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.இந்த போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles