உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பக்கியை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
52.47 வயதுடைய மடுல்சீமை கல்லுல்ல கீழ் பிரிவு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மடுல்சீமை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று தேடுதல் மேற்கொண்ட போது வேவ் வேறு இடங்களில் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் இன்றையதினம் (26) பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா