மதுப் பிரியர்களே இது உங்களுக்கான செய்தி

தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்பதில்லை என  மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன. மற்றொரு நிறுவனம் சோளத்தைப் பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கிறது.

இருப்பினும், 2020 ஜனவரி முதல் எத்தனால் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. நாளாந்தம் 24,000 லீற்றர் எத்தனோல் உற்பத்தி செய்யப்படுவதாக கலோயா சீனி தொழிற்சாலையின் பொது முகாமையாளர்  தெரிவித்தார்.

பெல்வத்த சீனி தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 20,000 லீற்றரும் செவனகல தொழிற்சாலையில் 18,000 லீற்றரும் உற்பத்தி செய்யப்படுகிறது.

Related Articles

Latest Articles