மத்திய மகாண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டனில் பிரபல 1AB பாடசாலை ஒன்றின் அதிபர் வெற்றிடத்திற்கு  SLPS – I – ஐ கொண்ட அதிபர் ஒருவர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், மிகை ஊழியர் சேவையின் அடிப்படையில் தரம் 2 – ii இல் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட ஒருவர் அதிபராக இணைத்தது தனது உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி  அதிபர் தரம் SLPS – I  – ஐ கொண்ட அதிபர் ஒருவர்,  மாகண கல்வி அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆனைக்குழுவில் முறைபாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் அவி /12/1101/530/035  இலக்கமும்  2012.08.08 திகதியும் கொண்ட அமைச்சரவை தீர்மானத்திற்கேற்பவும் கல்வி அமைச்சின் செயலாளரின் ED/04/60/07/18  இலக்கமும் 2013.01.03 திகதியும் கொண்ட சுற்றுநிருபங்களுக்குமைய மிகை ஊழியர் சேவையின் அடிப்படையில்   SLPS 2 – ii இல் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர் எனவும்

இவர்களுக்கு உரிய சேவை ஆசிரியர் சேவை என்பதும் 2 – ii அதிபர் தரத்திற்குரிய சம்பளத்தை பெறுவதைத்தவிர வேறெந்த வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் முதல் நியமனம் பெறும் பாடசாலையிலேயே கடமையாற்ற வேண்டும் எனவும் அமைச்சரவை தீர்மானமும் கல்வியமைச்சின் சுற்று நிருபமும் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

இந் நிலையில் அண்மையில் ஹட்டன் கல்வி வலயத்தில் பிரபல பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்ற அதே தினத்தில் மிகவும் அவசரமாக மாகாண கல்வி அதிகாரி ஒருவரின் வட்சப் மூலமும் பெக்ஸ் மூலமும் அனுப்பட்ட இடமாற்ற கடிதத்தின் படி  புதிய அதிபர் நியமிக்கப்பட்ட விந்தையான சம்பவம் 22.10.2020 அன்று நிறைவேறியுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்தின் பணிப்பாளர் முறையாக அதிபர் நியமனத்திற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்த போதும் வலயக் கல்விப்பணிப்பாளருக்கும் மாகாண கல்வி அதிகாரிக்குமிடையிலான அதிகாரப் போட்டி இந்த நியமனத்தில் முழுமையாக செல்வாக்கு செலுத்தியுள்ளதாக பெற்றோர்களும் பழைய மாணவர்களும் விசனம் தெரிவிப்பதுடன் தகமை வாய்ந்த அதிபர் தங்கள் பாடசாலைக்கு நியமிக்கப்படவேண்டுமெனவும் மாகாண ஆளுநரிடமும் கல்வி அமைச்சின் செயலாளரிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் இப்பாடசாலைக்கு அதிபர் தரம் SLPS – I   ஐச் சேர்ந்த தகமை வாய்ந்த ஒருவரை நியமிக்க வலயக் கல்விப்பணிப்பாளர் மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு சிபார்சு செய்ததாகவும் மாகாண கல்விப்பணிப்பாளரும் சிபார்சு செய்து மாகாணக் கல்விச் செயலாளருக்கு முன்கூட்டியே (ஆகஸ்ட் மாதத்தில்) அனுப்பியிருந்ததாகவும் அறியமுடிகின்றது.

எனினும் அதிகார துஸ்பிரயோகம் செயற்பட்டுள்ள தரம் 2 ஐஐ ஐச் சேர்ந்த மிகை ஊழியர்; அவசர அவசரமாக தரம் 1யுடீ பாடசாலைக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.  மிகவும் அவசரமாக தரம் 1யுடீ பாடசாலைக்கு இத்தகைய ஒருவர் கல்வியமைச்சின் சுற்றுநிருபங்களை மீறி நியமிக்கப்பட்டதன் அடிப்படை அதிகார துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமையையும் பின்புலத்தில் பிரபல அரசியல் வாதிகள் தொடர்புள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட SLPS – I    ஐச் சேர்ந்த அதிபர் உயர்கல்வித்தரம் உடையவர் 5 கல்வித்துறைசார் பட்டங்களைப் பெற்றவர். இந்த பாடசாலைக்கு மிகவும் பொருத்தமானவர் என்றும் இவரையே இந்த பாடசாலைக்கு நியமிக்க வேண்டும் என ஹட்டன் கல்வி வலய கல்வி பணிப்பாளர் சிபார்சு செய்ய மாகாண கல்வி பணிப்பாளரும் சிபார்சு செய்து மாகாண செயலாளருக்கு அனுப்பப்பட்ட நிலையில் தகவல்களை இருட்டடிப்பு செய்து அவசர அவசரமாக தகைமையற்ற அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தகைமையுடன் விண்ணபித்தவருக்கு எதிராக இடம்பெற்றுள்ள  அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

இவ்வாறான நிலையிலேயே பாதிக்கப்பட்டவர்  இந் நியமனத்திற்கெதிராக மாகாண ஆளுநர் மற்றும் கல்விச் செயலாளருக்கும் மேன் முறையீடு செய்துள்ளதாகவும் தன் அடிப்படை உரிமை மிறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஊழல் மற்றும் மோசடிகள் பணியகத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் அரசியல் பழிவாங்கல்களுக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தள்ளதாகவும்  அதி உத்தம ஜனாதிபதி மற்றும் ஒம்புட்மன் ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பொதுவாக மலையக கல்வித்துறையில் அதிகார துஸ்பிரயோகமும் அரசியல் செல்வாக்குடன் கூடிய நியமனங்களும் முற்றாக ஒழிக்கப்படு;ம் வரை கல்வியில் மாற்றம் சமூகமாற்றம் என்பன பகற் கனவே. இவ் அதிபர் நியமனத்தில்; மாகாண அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக முறைகேடு நிகழ்ந்துள்ளமையால் இந்த விடயத்துடன் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குமுவில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது என தெரிய வருகின்றது.

மக்கள் செய்தியாளர் – பா.திருஞானம்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles