மத்திய மாகாணத்தில் இன்னும் ஆசிரியர் நியமனம் வழங்கப்படாமல் உள்ள சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதிக்குள் நியமனம் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மத்திய மாகாணத்தில் உள்ள சுமார் 125 உதவி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவது இழுபறியில் இருந்தது. அரச நிர்வாக சேவை திணைக்களத்திலேயே இதற்கான தடங்கல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த திணைக்களத்துக்கு நான் நேரில் சென்றேன். பணிப்பாளரை சந்தித்து கடும் விசனத்தை வெளியிட்டேன்.
இதனையடுத்து கல்வி அமைச்சிடம் இருந்து இறுதி விளக்க கடிதம் கோரப்பட்டது. அந்த கடிதத்தை வழங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுத்தேன். தற்போது தடைகள் எல்லாம் நீங்கியுள்ளன. இம்மாத இறுதிக்குள் 125 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படும்.” – என்றார் கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார்.
ராமு தனராஜ்