மனோவுக்கு தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்குமா சஜித் அணி?

“பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பளிப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. மனோ கணேசன் உட்பட பலரும் வாய்ப்பு கோரியுள்ளனர். உரிய பரிசீலனையின் பின்னர் தீர்மானம் எடுக்கப்படும்.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தேசிய பட்டியல் விவகாரம் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles