மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை ( வயது – 80) இன்று காலை இயற்கை எய்தினார்.
மதத்துக்கு அப்பால் மனிதத்தை நேசித்தனர். மனித உரிமை காவலராக செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர். தமிழ் தேசியம் தடம்புரளாத விதத்தில் நெருக்கடியான கட்டங்களிலும் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கியவர்.