மலையக இளைஞர்களை இன்று சந்திக்கிறார் சஜித்

மலையக  இளைஞர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு, ஹட்டன் டி.கே. டபிள்யூ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா.சிவநேசனே இதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், பிரதித் தலைவர் உதயகுமார், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

மலையக இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. எனவே, கட்டாயம் பங்கேற்று பயன்பெறுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் இளைஞர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles