மலையக குருவியின் செய்திக்கு சிவநேசன் மறுப்பு – பொலிஸில் முறையிடவும் நடவடிக்கை

தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் இருவருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக மலையக குருவியில் வெளியான  செய்திக்கு மேற்படி சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா சிவநேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டிருந்த முறைப்பாடொன்றை அடிப்படையாகக்கொண்டு குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் எவ்வித உண்மையும் இல்லை என சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குடிபோதையில் கீழே விழுந்ததால்தான் நபரொருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.

” சம்பவம் நடைபெறும்போது நான் பங்களாவுக்குள்தான் இருந்தேன். சத்தம் கேட்டதும் என்ன நடந்தது என பார்வையிட சென்றேன். ஆனால், மிரட்டியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படுவதெல்லாம் பொய்யாகும்.” எனவும் கூறினார்.

மலையக குருவி வெளியிட்டிருந்த செய்தி வருமாறு,

கட்சிக்குள் சண்டை – சிவா, பத்மா முட்டி மோதல்!உடைந்தது ஒருவரின் மண்டை!!

Related Articles

Latest Articles