கொழும்பு – பதுளை மார்க்கத்தில், கினிகம ஹில்லோயாவிற்கு இடையில் இன்று ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
தொடருந்து பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதன் காரணமாகவே போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று (08.11.2023) ரயில் சேவையில் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பண்டாரவளை ரயில் நிலைய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
