மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பட்டிப்பொல புகையிரத நிலையத்திற்கு அருகில் சீரற்ற காலநிலை காரணமாக புகையிரத பாதையில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளதாகவும், புகையிரத ஊழியர்கள் மரத்தை அகற்றி சில மணித்தியாலங்களின் பின்னர் ரயில் போக்குவரத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
