மலையகத்தில் கடும் மழை: நீர்த்தேக்கங்களின் நீட்மட்டம் அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்தேக்கத்தின் நீர் மட்டும் வெகுவாக உயர்ந்து உள்ளது.

மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் மூன்று அடி மட்டுமே உள்ளது.

கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது,
விமலசுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது,

லக்சபான நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது இன்னும் நான்கு அங்குலம் மட்டுமே நிறைய உள்ளது, மேல் கொத்மலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட 6 அங்குலமே நிரம்ப உள்ளது.

தற்போது பெய்து வரும் மழையால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகள் அருவிகள் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் சகல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து எந்த நேரத்திலும் வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படலாம் ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன மழை காரணமாக பெரும் தோட்ட தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கையும் பண்ணையாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles