மத்திய மாகாணத்தில் நீரேந்தும் பகுதிகளில் பதிவாகும் அதிக மழை வீழ்ச்சியினை தொடர்ந்து, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை மவுசாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எனினும், தற்போது இரண்டு வான்கதவுகள் மூடப்பட்டுள்ளன எனவும், ஒரு வான்கதவு மாத்திரம் திறக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம், ஹட்டன்
