மஸ்கெலியா விபத்தில் இருவர் பலி: மேலும் இருவர் படுகாயம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆட்டோவும், சிறிய ரக லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணித்த இருவர் பலியாகியுள்ளனர்.

மேலும் இருவர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டப் பகுதியில் இன்று (10.08.2024) மாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கி பால் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும், மஸ்கெலியாவிலிருந்து நல்லதண்ணியை நோக்கி அதிவேகமாகச் சென்ற ஆட்டோவுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள், க.கிஷாந்தன்

Related Articles

Latest Articles