மஹிந்த இலக்கு வைக்கப்படுவது ஏன்?

” புலி டயஸ்போராக்களின் வேண்டுகோளுக்கமையவே தற்போதைய அரசாங்கத்தால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மொட்டு கட்சி தலைமயகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

” முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது. இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவியை வகிப்பவர்தான் நாட்டின் தலைவர். நாட்டுக்காக பல முடிவுகளை அவர் எடுக்க நேரிடும். தமது எதிர்காலம் குறித்து கருதாது நாட்டுக்காகவே முடிவுகளை எடுக்க நேரிடும். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளால் எதிர்காலத்தில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். எனவேதான் உலக நாடுகளில்கூட தமது நாட்டின் முன்னாள் தலைவர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டுவருகின்றன.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசியல் பழிவாங்கல் மற்றும் குரோத நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

புலி டயஸ்போராக்களின் தேவைக்காக, அவர்களின் பழிவாங்கல் நடவடிக்கைக்காக இந்நாட்டில் போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் போர் நிலை ஏற்பட்டால்கூட முதுகெலும்புடன் செயற்படக்கூடிய அரச தலைவர் ஒருவர் உருவாவதை தடுக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிட்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles