மாகாணத்தடை இரு வாரங்களுக்கு நீடிப்பு! பல தரப்பும் கோரிக்கை விடுப்பு

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த மருத்துவர் சங்கம் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன், சிகை அலங்கார நிலையங்கள், பார்கள், ரெஸ்டூரன்கள் ஆகியன ஒரு மாதத்துக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் எனவும் வைத்திய அங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, மாகாணங்களுக்கிடையில் இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் மற்றும் பஸ் சேவைகள் இடம்பெறமாட்டாது எனவும், மாகாணத்துக்குள்தான் சேவைகள் இடம்பெறும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles