அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்குவதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது பிரதமரே மேற்படி யோசனையை முன்வைத்துள்ளார்.
இதற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.அத்துடன், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் தமது ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
