மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
சம்பவத்தில் உடுப்பிட்டியைச் சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது 41) என்பவரே உயிரிழந்தார்.
யலில் உழவில் ஈடுபட்ட போது சம்பவம் இடம்பெற்றதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச மருத்துவனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.