முருகன் ஆலயம் 2 ஆவது முறையும் உடைக்கப்பட்டு கொள்ளை!

எட்டாம்பிட்டிய  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,   பண்டாரவளை  நெளுவை தோட்ட ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம்   இவ்வருடத்தில் இரண்டாவது  முறையாக   உடைக்கப்பட்டு  திருட்டபட்டுள்ளது.

இதன்போது ஆலய விக்ரகத்தின்  தாலி, ஆலயத்தின் திருவிழாவில் சேர்க்கபட்ட  பணம், மற்றும்  உண்டியல்  பணம்  என்பன  களவாடப்பட்டுள்ளன.


இவ்வருடம்  இந்த ஆலயம்  இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டு  திருட்டு  சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் கடந்த முறை இடம்பெற்ற    திருட்டு சம்பவம்  தொடர்பாக   இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

இன்று இடம்பெற்ற இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக  எடாம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles