யாழ்ப்பாணத்தில் மூச்சு எடுப்பதற்குச் சிரமப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த தர்சன் பாமினி என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேற்படி குடும்பப் பெண்ணுக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
உடனே அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நாட்பட்ட நுரையீரல் அடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்று உடற்கூற்றுப் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.










