தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டு மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
இதற்கமைய, டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை நடவடிக்கைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் 2023 கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் நடத்தப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.










