புத்தளம் , முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங் களை சேதப்படுத்தி , சுமார் 8 லட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட மாண வர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் உள்ளிட்ட உபகரணங்கள்
பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
முந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளில் அலுவலகத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத் தியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இவ்வாறு இரண்டு தடவைகள் அந்தப் பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், அங்கு இருந்த உபகரணங்களையும் திருடிச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.