நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நீக்கியுள்ளது.
இது தொடர்பில் மூவருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளருக்கு மாறாக பிறிதொரு வேட்பாளருக்கு ஆதரவளித்தாலேயே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.