மஹர சிறைச்சாலை கலவரத்தால் காயமடைந்த கைதிகளில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி குறித்த சம்பவத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, காயமடைந்தோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.