நோர்வூட் பிரதேச சபையின் மேலும் மூன்று உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதேச சபையின் செயற்பாடுகள் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நோர்வூட் பிரதேச சபையின் உப தவிசாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கடந்த 15 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின.
இதில் சமர்ஹில், வனராஜா, சலன்கந்த வட்டார உறுப்பினர்கள் மூவருக்கு வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.
இதனால் நாளை நடைபெறவிருந்த நோர்வூட் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு பிரதேச சபை நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளன.
