புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14ஆம் திகதி பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக இருக்கின்றபோதிலும் 26 பேருக்கு மாத்திரமே அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல்சிறிபாலடி சில்வா, ஜீ.எஸ். பீரிஸ் ஆகியோருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன.