மொட்டு கட்சி மாநாட்டில் விமல் பங்கேற்காதது ஏன்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 5 ஆவது தேசிய மாநாடு இன்று நடைபெற்ற நிலையில், இந்நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ச பங்கேற்கவில்லை.

அரச கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுக்கு மாநாட்டில் பங்கேற்குமாறு பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்திருந்தது.

எனினும், அரச பங்காளிக்கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச பங்கேற்கவில்லை. இது தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பியபோது,

” எமது கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.”- என்றார்.

Related Articles

Latest Articles