மொட்டு கட்சியின் மூன்றெழுத்து ஜனாதிபதி வேட்பாளர் பஸிலா?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு பஸில் ராஜபக்ச தகுதியானவர் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அக்கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தலுக்கு நாம் தயாராகிவருகின்றோம். அதற்கிடையில் எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்ளவும் தயார். கடந்தமுறை இறுதி நேரத்தில்தான் மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டார், இம்முறையும் இறுதி நேரத்தில் பெயர் திரைநீக்கம் செய்யப்படும்.

கோட்டாபயவுக்கு பதிலாக பஸில் ராஜபக்சவை களமிறக்குமாறு கடந்தமுறையும் நான் வெளிப்படையாக கூறியிருந்தேன். அடுத்த முறை களமிறங்குவதற்கும் பஸில் ராஜபக்ச பொருத்தமானவர் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன்.”  – என்றார்.

Related Articles

Latest Articles