மொட்டு கட்சியில் இருந்து விலகி ரணிலை ஆதரிப்பேன் – அமைச்சர் பிரசன்ன அதிரடி

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலுக்குப் பலவீனமான வேட்பாளரை களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்.” –

இவ்வாறு வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும், எமக்கும் அரசியல் கொள்கை ரீதியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தபோது எதிர்கால அரசியல் பற்றி ஆராய்ந்துகொண்டு சோதிடம் பார்த்துக்கொண்டிருக்காமல் தனி மனிதனாக ரணில் விக்கிரமசிங்க பாரிய சவால்களை ஏற்றுக்கொண்டார். 2022 ஆம் ஆண்டைக் காட்டிலும் சமூக கட்டமைப்பு தற்போது மாற்றமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டு மாத்திரம் முன்வைக்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு முன்னர் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையும். நாட்டையும், நாட்டு மக்களையும் பொருளாதார நெருக்கடியில் இருந்து பாதுகாத்த ஜனாதிபதி ரணில் விக்கி ரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள். பொருளாதார நெருக்கடியின்போது அரசாங்கத்தை பொறுப்பேற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் முன்வரவில்லை.

நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை ஏற்பதுதான் சிறந்த தலைமைத்துவம். மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் சஜித் பிரேமதாஸ அல்லது அனுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியை போன்று பொருளாதார நெருக்கடியான சூழல் ஒன்று ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதனை சமாளிப்பார்கள்? ஆகவே மக்கள் சிந்தித் துச் செயற்பட வேண்டும்.

அரசமைப்பின் பிரகாரம் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகவோ அல்லது பொதுவேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதை பொது ஜன பெரமுனவிடம் வலியுறுத்தியுள்ளேன். பலவீனமான வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக பொது ஜன பெரமுன களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை உள்ளவர் ஒருவர் பொதுஜன பெரமுனவில் தற்போது இல்லை. கட்சி யின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகைமையற்றவர். இதனை நான் அவரிடமே குறிப்பிட் டுள்ளேன்.”- என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles